பைனான்சியரை சராமாரியாக வெட்டி சாய்த்த மர்ம கும்பல்!! நாகையில் பரபரப்பு!!

 
நாகை

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள தெற்கு பொய்கைநல்லூர் கிராமத்தில் வசித்து வந்தவர் மனோகர். வட்டிக்கு விடும் தொழில் செய்து வரும் இவர், வேளாங்கண்ணியில் தங்கும் விடுதி ஒன்றையும் நடத்தி வருகிறார். மனோகருக்கும அப்பகுதியில் உள்ள சிலருக்கும் தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. 

கொலை

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மனோகர் வேளாங்கண்ணி முச்சந்தி அருகே உள்ள அவரது அலுவலகத்தில் நண்பர் மணிவேலுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கத்தி, அரிவாளால் உள்ளிட்ட ஆயுதங்களால் மனோகரை சரமாரியாக வெட்டினர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மணிவேல் தடுக்க முயன்றபோது அவரையும் கையில் வெட்டிய அந்த கும்பல், அங்கிருந்து தள்ளி சென்றுவிடும்படி அவரை எச்சரித்துள்ளது.

கையில் காயமடைந்த நிலையில் மணிவேல் நகர்ந்துவிட மனோகரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் தலை முழுவதும் காயங்கள் அடைந்த மனோகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாகை எஸ்பி ஜவகர், நேரில் விசாரணை மேற்கொண்டார். மனோகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

நாகப்பட்டினம்

படுகாயம் அடைந்த மணிவேல் நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறனர். மேலும் மனோகரை படுகொலை செய்து விட்டு மூன்று மோட்டார் பைக் மூலம் தப்பிச்சென்ற குற்றவாளிகள் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளைக் கொண்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.விடுதி உரிமையாளரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்ப்பட்டுள்ளதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web