தொடரும் மர்மம்!! சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் தற்கொலை!!

 
துப்பாக்கி

 

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் பிரபல தனியார் ரிசார்ட் ஒன்று இயங்கி வருகிறது. குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த ரிசார்ட்டில் அதிகளவில் தங்குவது வழக்கம்.இந்நிலையில் எஸ்.எஸ்.ஐ ( சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்) பார்த்திபன் இந்த ரிசார்ட்டில் தங்கி இருந்தார். திடீரென்று துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

துப்பாக்கி
மேலும் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட எஸ்.எஸ்.ஐ. பார்த்திபன் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரனின் காவல் பணிக்காக வந்திருந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறப்பு காவல் உதவி ஆய்வாளரான பார்த்திபன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? பணிச்சுமையா? மேல் அதிகாரிகளின் அழுத்தமா?

தாய் மற்றும் 2 குழந்தைகள் தற்கொலை

அல்லது குடும்பத் தகராறா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். மேலும் அவர் தங்கியிருந்த ரிசார்ட் நிர்வாகத்தினரிடமும், ஊழியர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் ரிசார்ட்டில் தங்கியிருந்த எஸ்.எஸ்.ஐ. அதிகாரி பார்த்திபன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழைய குற்றாலம் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web