கடற்கரையில் காணாமல் போன புது மனைவி! ஒரு கோடி செலவு செய்து கண்டுபிடித்த அப்பாவி கணவன்!

 
சாய் ப்ரியா

காதலரைக் கரம் பிடிப்பதற்காக திட்டம் போட்டு, திருமணத்திற்குப் பிறகும் கணவனை கடற்கரைக்கு அழைத்துச் சென்று, நொடிப் பொழுதில், காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியைப் பற்றி தான் மொத்த ஆந்திராவும் அதிசயிக்கிறது. இது தெரியாமல், மனைவியைக் கண்டு பிடிப்பதற்காக ரூ.1 கோடி வரையில் செலவு செய்து, ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை நடத்தி, கடற்கரையில் தவம் கிடந்த கணவனை ஆச்சர்யமாக பார்க்கிறது.

ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் வசித்து வருபவர்  சாய் பிரியா. இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் உறவினரான சீனிவாசை பெரியவர்கள் பார்த்து நிச்சயித்து, திருமணம் செய்து வைத்தனர்.

சீனிவாஸ் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். எனவே வேலை நிமித்தமாக கணவன், மனைவி இருவரும் ஐதராபாத்தில் தனியாக வீடு எடுத்து, குடும்பம் நடத்தி வந்தனர். 

சாய் ப்ரியா

இந்நிலையில் சாய் பிரியா, தான் கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்க விரும்புவதாக சீனிவாசிடம் பிடிவாதம் பிடித்துள்ளார். அவரின் சம்மதத்தின் பேரில் சாய் பிரியா விசாகப்பட்டினத்திற்கு வந்தார். அதற்கு அடுத்து சீனிவாஸ் விசாகப்பட்டினம் வந்தடைந்தார். இருவரும் சேர்ந்து கடந்த திங்கட்கிழமை மாலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்கரைக்கு சென்றனர். அப்போது சீனிவாசனுக்கு செல்போன் அழைப்பு வந்ததால், பேசிக் கொண்டு இருந்தார். செல்போனில் பேசி விட்டு, திரும்பி பார்த்தால் அவரது மனைவி சாய்ப்ரியாவைக் காணவில்லை. இதனால் பதறிப் போன அவர் கடற்கரை முழுவதும் சாய்பிரியாவை தேடினார்.

ஒருவேளை, சாய்ப்ரியா தெரியாமல் கடலில் விழுந்து இருக்கலாம் என்று சந்தேகமடைந்தார். உடனே இது குறித்து விசாகப்பட்டினம் போலீசாருக்கும், கடலோர காவல் படையினருக்கு தகவல் அளித்தார். அதன் பின்னர் ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு சாய் பிரியாவை தேடும் பணி தொடங்கி 2 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதற்கு சீனிவாசன் ரூ.1 கோடி வரையில் செலவு செய்துள்ளார்.

இந்நிலையில் சாய் பிரியா நெல்லூரில் இருப்பது குறித்து உறவினர் மூலமாக நேற்று காலை சீனிவாசனுக்கு தகவல் தெரிய வந்தது. உடனே இது பற்றி விசாகப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சாய்பிரியாவை நெல்லூரில் இருந்து விசாகப்பட்டினம் போலீசார் அழைத்து சென்றனர். சாய்பிரியாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியில் வந்தன.

சாய் ப்ரியா
சாய்பிரியா திருமணத்திற்கு முன்னரே நெல்லூரைச் சேர்ந்த ரவி என்பவரை காதலித்து வந்துள்ளார். சீனிவாசனுடன் திருமணம் முடிந்த பிறகும் ரவியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். எனவே கணவனுடன் தொடர்ந்து வாழ விரும்பாத சாய் பிரியா, திட்டம் போட்டு ஐதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு வந்துள்ளார்.

கடற்கரையில் கணவனை ஏமாற்றி விட்டு கள்ளக்காதலன் ரவியுடன் சேர்ந்து சாய்பிரியா நெல்லூருக்கு ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. மனைவி இறந்திருப்பாளோ என்று பதறிப் போய் கணவன் ரூ.1 கோடி செலவு செய்து தேடுதல் வேட்டை நடத்திய நிலையில் பெரிய திருப்பம் ஏற்பட்டதால் உறவினர்கள், போலீசார் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web