அடுத்த அதிர்ச்சி! மாணவனுக்கு ‘போதை’ ஏற்றி, பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியை!

 
ஆசிரியை பாலியல்

நாட்டில், கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிந்தைய வாழ்க்கை பல விதங்களில் சீரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஒரு புறம் வன்முறை, கொலை, கொள்ளை, அடிதடி, வெட்டு குத்து சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இன்னொரு புறம் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பெண்கள் பாலியல் ரீதியிலான குற்றச்செயல்களில் சமீபமாக அதிகளவில் ஈடுபடுவதும், அதன் தொடர்ச்சியாக கொலை செய்யும் அளவிற்கு துணிவதும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சமீபத்தில், காதலனை விஷம் வைத்து கொன்ற காதலி கேரளாவை அதிர வைத்தது போலவே, தன்னிடம் டியூஷன் படிக்க வந்த பிளஸ்1 மாணவனுக்கு பல முறை மது கொடுத்து, குடிக்க செய்து, ஆசிரியையே பாலியல் வன்கொடுமை  செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை அதிர செய்த ஆசிரியையை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தில் பிளஸ்1 மாணவன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நன்றாக படித்துக் கொண்டிருந்த மாணவனின் படிப்பிலும் மதிப்பெண்கள் குறைய துவங்கியது. மாணவனின் நடவடிக்கையிலும் மாற்றம் ஏற்பட்டதை கவனித்த பெற்றோர், இது குறித்து பள்ளி ஆசிரியைகளிடம் புகார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து மாணவனை அழைத்து இது குறித்து பெற்றோர்களும் விசாரணை நடத்தினர். மாணவன் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டு உடனடியாக மனநல ஆலோசனைக்கு அழைத்து சென்றனர்.

10ம் வகுப்பு மாணவனுடன் சல்லாபம் செய்த ஆசிரியை !!  வெளிச்சத்துக்கு வந்த பகீர் உண்மைகள்!!
அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தது. மாணவன் மனநல ஆலோசகரிடம் தன்னை டியூஷன் ஆசிரியை பல முறை மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியதால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

34 வயதான டியூஷன் ஆசிரியை தனது கணவனை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா காலத்தில் மாணவனுக்கு மது கொடுத்த ஆசிரியை பலமுறை அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

10ம் வகுப்பு மாணவனுடன் சல்லாபம் செய்த ஆசிரியை !!  வெளிச்சத்துக்கு வந்த பகீர் உண்மைகள்!!

மாணவன் அளித்த புகாரின் அடிப்படையில்  அந்த ஆசிரியைபோலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கலிகாலம்னு நீங்க புலம்புறது கேட்கிறது. அதனால், பெற்றோர்களே... இனி பெண் பிள்ளைகளை மட்டுமல்ல... ஆண் பிள்ளைகளையும் ரொம்ப  பத்திரமா பார்த்துக்கோங்க. அவங்களோட தினமும் மனம் விட்டு பேசுங்க.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web