அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆப்பு!! கூடுதலாக ஒரு மணி நேரம் பணிபுரிய முதல்வர் அறிவுறுத்தல்!!
கர்நாடக மாநிலத்தில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றி அமைக்கும் வகையில் விரைவில் 7 வது ஊதியக்குழு அமைக்கப்படும். இந்த குழு ஓய்வுபெற்ற தலைமைச் செயலர் சுதாகர் ராவ் தலைமையில் செயல்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் "கர்நாடக மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு 7வது ஊதிய குழு அமைக்கப்பட உள்ளது.
அரசு ஊழியர்கள் பொதுமக்களுக்கு சேவையாற்றும் வகையில் தினசரி ஒரு மணி நேரம் கூடுதலாக பணிபுரிய வேண்டும். உங்களின் குடும்பம் மற்றும் பொருளாதார பிரச்சினைகளை அரசு பார்த்துக்கொள்ளும். அரசு ஊழியர்கள் நேர்மையாக, அர்ப்பணிப்பு, விசுவாசத்துடன் பணியாற்றினால் மட்டுமே அரசு இயந்திரம் சுறுசுறுப்பாக செயல்படமுடியும். ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் உயரும். புதிய கர்நாடகத்தை உருவாக்கி அதன் மூலம் புதிய இந்தியாவை படைக்க இன்னும் நாம் அனைவரும் இணைந்து கடுமையாக உழைக்க வேண்டும். இந்தியா ரூ.380 லட்சம் கோடி பொருளாதாரத்தை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது.
அதில் கர்நாடக மாநிலம் ரூ.80 லட்சம் கோடி பொருளாதார பங்களிப்பு செய்ய வேண்டும். முந்தைய ஊதிய குழு அமல்படுத்தப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு ஊதிய குழுவை அமைக்கிறோம். வேறு எந்த மாநிலமும் இவ்வளவு விரைவாக ஊதிய குழுவை அமைக்கவில்லை. நேரமும், பணமும் முக்கியம். சரியான நேரத்தில் சரியான முறையில் பணத்தை சம்பாதிப்பது வாழ்க்கைக்கு உறுதுணையாகவும், மிகப்பெரிய உந்துசக்தியாகவும் இருக்கும். அதன் அடிப்படையில் 7வது ஊதிய குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!