மீண்டும் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

 
gold actress

அரசன் ஆனாலும், ஆண்டி ஆனாலும் நம்மளிடம் கடுகளவாவது நிச்சயம் தங்கம் இருக்கும். ஏனென்றால் தங்கமானது அந்த அளவிற்கு நம்மளுடைய வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. உலகில் என்னதான் புதிய புதிய ஆபரங்கள் இருந்தாலும் தங்கத்தின் மீதான மதிப்பு மற்றும் மோகமும் மட்டும் என்றும் நம்மளிடம் இருந்து குறையப்போவதும் இல்லை. 

gold jewel actress sneha

நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும்பங்கு வகுக்கிறது இந்த தங்கம். தங்கத்தை விருப்பதவர்கள் எவரும் இல்லை. நாட்டின் பணவீக்கம் உயர்விற்கு மிக முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவு முதலீடு செய்து, பயன்படுத்துகின்றன.சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து விற்பனையாகி வரும் நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

nayanthara gold jewels

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256-க்கு உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 38 ரூபாய் உயர்ந்து, ரூ.4,805-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 304 ரூபாய் உயர்ந்து, ரூ.38,440-க்கு விற்பனையாகிறது. 

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,905-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 31 ரூபாய் உயர்ந்து, ரூ.3,936-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,100 ரூபாய் உயர்ந்து, ரூ.62,300-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.62.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web