உச்சம் தொட்ட தங்கத்தின் விலை !! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!
சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தினை பொறுத்து சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு இறக்குமதி வரியை உயர்த்திய பிறகு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. தங்கத்தின் விலை சரிவை சந்திக்கும் அதே வேளையில் அடுத்த நாளே மீண்டும் உயரத் தொடங்குகிறது. இதனால் தங்க முதலீட்டாளர்கள், நகைப்பிரியர்கள், இல்லத்தரசிகள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக குறைந்து விற்பனையான தங்கம் விலை நேற்று முன் தினம் முதல் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. நேற்று மேலும் அதிரடியாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. .சென்னையில் நேற்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 25 ரூபாய் உயர்ந்து, ரூ.4,830-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ரூ.38,640-க்கு விற்பனையாகிறது. அதேபோல், நேற்று முன் தினம் 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,936-க்கு விற்பனையான நிலையில்,நேற்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் உயர்ந்து, ரூ.3,956-க்கு விற்பனை செய்யப்படுகிறது.நேற்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ரூ.61,100-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து 2 நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் கலக்கத்தினை உருவாக்கியுள்ளது. அதன்படி சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4840க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவரனுக்கு ரூ.80 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.38720க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலை சற்றே குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ 61க்கும் , ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ61000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!