தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! ஏமாற்றத்தில் இல்லத்தரசிகள்!

 
தங்கம்

தங்கம் விலை இன்று காலை நேர நிலவரப்படி சவரனுக்கு ரூ.112 உயர்ந்து இல்லத்தரசிகளை ஏமாற்றமடைய செய்துள்ளது. கிராம் ஒன்றுக்கு ஆபரண தங்கம் ரூ.14 உயர்ந்துள்ளது. சர்வதேச தங்கத்தின் விலைகள், செலாவணி மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள், உள்ளூர் வரிவிதிப்புகள் போன்றவற்றின் அடிப்படையிலேயே இந்தியாவில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், தங்கம் விலை உயர சர்வதேச விலைகள் தான் முக்கியக் காரணம். சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயரும் போது, இந்தியாவில் தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்படும். 

இன்றைய தங்கத்தின் விலை, நேற்றைய தங்கத்தின் விலையை விட மாறுபட்டதாக இருக்கும். இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தகம் எதுவும் நடப்பதில்லை என்பதால், அன்றைக்கு மட்டும் தங்கத்தின் விலை மாறாது. பணவீக்கம் அதிகமாகும் போது தங்கத்தின் விலை குறையும். பணவீக்கம் அதிகரிக்கும் போது வட்டி விகிதங்கள் உயரும் என்பது பொதுவாக பொருளாதார நடைமுறையாகும். 

தங்கம்

அரசியல் ரீதியான பதற்ற‌ங்கள், அச்சுறுத்தல்கள் போன்ற காரணங்களாலும் இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். உலக அளவில் தங்கத்திற்கு தேவை அதிகரித்து வருவதால், அதையொட்டி உள்நாட்டு தங்கத்தின் விலையும் சீராக மாற்றம் காணும். எனவே தங்கத்தை வாங்குவதற்கு முன் எப்போதும் விலையை சரிபார்த்துக் கொள்ளவும்.

அதன்படி சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56-க்கு உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 14 ரூபாய் உயர்ந்து, ரூ.4,736-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்து, ரூ.37,888-க்கு விற்பனையாகிறது. 

தங்கம்

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,868-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 11 ரூபாய் உயர்ந்து, ரூ.3,879-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் உயர்ந்து, ரூ.58,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.58.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web