13வது மாடியிலிருந்து கீழே விழுந்த பேராசிரியை பலி! கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை!

 
செளமியா

திருச்சியில், 13வது மாடியில் இருந்து கீழே விழுந்து பேராசிரியை செளமியா மரணமடைந்த வழக்கில், பேராசிரியை செளமியா தற்கொலை செய்து கொண்டுள்ளாரா? அல்லது கொலையா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வசித்து வருபவர் பிரேம்குமார். எடமலைப்பட்டி புதூரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மனைவி செளமியாவுடன் வசித்து வந்தார். இந்த தம்பதியருக்கு 2 மகள்கள் உள்ளனர். 32 வயதான சௌமியா, திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி ஒன்றில் வணிகவியல் துறை பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

குதித்து தற்கொலை

இந்நிலையில், முன்தினம் இரவு சௌமியா மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்து கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் உடனடியாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் பிணமாக கீழே கிடந்த சௌமியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இது குறித்து, போலீசார் விசாரணை நடத்தினார்கள். முதல்கட்ட விசாரணையில், சௌமியா முன்தினம் இரவு 8 மணிக்கு மேல் வீட்டில் இருந்து துணி காய போடுவதற்காக வெளியே வந்துள்ளார். அதன் பிறகே அவர் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்துள்ளதாக தெரிகிறது. 

போலீஸ்

இதனால் அவர் துணிகளை காய வைத்த போது நிலை தடுமாறி கீழே தவறி விழுந்து இறந்தாரா? அல்லது குடும்பத் தகராறு காரணமாக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கீழே தள்ளி கொலை செய்தார்களா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web