தந்தை கண் முன்னே மகன் பரிதாப பலி! கதறியழுத போலீஸ் எஸ்.ஐ.!

 
விபத்து

விதி சில நேரங்களில் வினோதமாக விளையாடி, ஒரு நொடியில் வாழ்க்கையையே புரட்டி போட்டு விடுகிறது. பெரம்பலூரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவரின் மகன் சாலை விபத்தில், அவரது கண் முன்பாகவே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் ரெங்கா நகரில் வசித்து வருபவர் சண்முகம். இவர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணியாற்றி வருகிறார். இவரது 2வது மகன் பிரவீன்ராஜ் (21) திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். விடுமுறையை கழிப்பதற்காக பிரவீன்ராஜ் பெரம்பலூரில் உள்ள வீட்டிற்கு வந்திருந்தார்.

பெரம்பலூர்

இந்நிலையில், பிரவீன்ராஜ் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். அப்போது ஆவின் பால் பண்ணை அருகே பிரவீன்ராஜ் சென்று கொண்டிருந்த போது, அவரது எதிர் திசையில் அசுர வேகத்தில் தண்ணீர் டேங்கர் லாரி ஒன்று வந்தது. இதை பிரவீன்ராஜ் சற்றும் எதிர்பார்க்கவில்¬. திடீரென்று கண் இமைக்கும் நேரத்தில் பிரவீன்ராஜ் மோட்டார் சைக்கிளில் தண்ணீர் லாரி வேகமாக மோதியது. அந்த வேகத்தில் பிரவீன்ராஜ் தூக்கிவீசப்பட்டு ரத்தவெள்ளத்தில் படுகாயமடைந்து துடிதுடித்துக் கொண்டிருந்தார்.

விபத்து

இந்த விபத்து குறித்து அருகில் இருந்த ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது ரோந்து பணியில் இருந்த பிரவீன்ராஜின் தந்தை எஸ்.ஐ. சண்முகம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார். தனது மகன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்து சண்முகம் கதறி அழுதார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பிரவீன்ராஜ் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பிரவீன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். தந்தை கண்முன்னே மகன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த சோக சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web