இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனுக்கு கொரோனா தொற்று உறுதி!

 
முத்தரசன்

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது. ஆகையால் மக்களே இந்த பண்டிகை காலத்தில், ஜனநெருக்கடியான இடங்களுக்கு பயணிப்பதைத் தவிருங்கள். மீண்டும் முக கவசத்தை அணிவதற்கு மறக்காதீங்கள். நேற்றைய தினம் நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. 

இத்தகைய செய்திகளைப் படிக்கும் பலரும், நடிகர், நடிகைகளும், அரசியல் தலைவர்களும் மட்டுமே தான் மனிதர்களா? கொரோனா எல்லோருக்கும் தானே வருகிறது? இதையெல்லாம் செய்தியாக போடுகிறீர்கள் என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.

முத்தரசன்

நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்களை குறைந்த பட்சமாக சந்திக்கிறார்கள். இத்தனைய செய்திகளின் மூலமாக இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வார்கள். அத்தனைப் பாதுகாப்பாக இருக்கிற பிரபலங்களுக்கே கொரோனா தொற்று வருகிற நிலையில், பொதுமக்கள் இன்னும் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பதே நோக்கம்.

 இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசனுக்கு கடந்த இரண்டு நாட்களாகவே காய்ச்சலும், சளி, இருமல் இருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

முத்தரசன்

இதனையடுத்து அவர் ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவ மனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே முத்தரசனின் உடல்நிலை குறித்து மாநில துணை செயளாளர் பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முத்தரசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராகவும், இயல்பாகவும் இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web