வேலியே பயிரை மேய்ந்த கதை!! மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியருக்கு அடி உதை!!
மாணவ மாணவிகளுக்கு பாடம் மட்டுமின்றி ஒழுக்கத்தையும் கற்பிக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவுகளை தருகின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவிகள் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுக்கின்றனர். தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பணிபுரியும் ஆசிரியர் அங்குள்ள மாணவிகளிடம் தவறாக நடந்துக்கொள்வதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் கூறினர். ஆசிரியரின் தவறான நடத்தை குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தினர்.
ஆத்திரமடைந்த பெற்றோர்கள் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரின் மீது செருப்புகளை வீசினர். இந்நிலையில், சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது இன்று பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்