கோவிலில் திருடுவதிலும் சாமி பக்தியை காட்டிய திருடன்!! வைரல் வீடியோ!!

 
கோவிலில் திருட்டு

கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், உண்டியலில் காணிக்கை செலுத்தி விட்டு செல்வது வழக்கம் இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகர் அருகே சுகா கிராமத்தில் பெண் தெய்வத்திற்கான கோவில் ஒன்று உள்ளது.  இந்த கோவிலுக்குள் நுழைந்த மர்ம ஒருவர்  சட்டையில்லாமல், முகமூடி அணிந்து கொண்டு கோவிலுக்கு திருட சென்றுள்ளார். கோவிலின் திரை சீலையை விலக்கி விட்டு உள்ளே நுழைந்த அவர், தனக்கு முன்னே பெண் தெய்வம் காட்சி கொடுப்பது கண்டு சற்று திகைத்து நின்றார்.

அதன்பின், தலை வணங்கி சாமி கும்பிட்டு விட்டு கோவிலில் இருந்த உண்டியல் பெட்டியை தூக்கி கொண்டு சென்றுள்ளார். இந்த காட்சிகள் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளிவந்து வைரலாகி வருகின்றன.  அதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார், கோவிலின் இரு பெரிய மணிகள் மற்றும் பக்தர்கள் கடவுளுக்கு காணிக்கையாக கொடுத்த பொருட்கள் உள்ளிட்டவற்றையும் அந்த நபர் திருடி சென்று விட்டாராக என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ட்விட்டரில் விமர்சனம் வெளியிட்ட ஒருவர், கோவிலின் கருவறையில் இருந்து பக்தர் ஒருவர் திருடி செல்கிறார் என்றால், அது திருட்டு ஆகாது. தன்னுடைய கடின சூழலில், அந்த பக்தர் இறைவனிடம் உதவி கேட்டுள்ளார் என தெரிவித்து உள்ளார். அதில் மற்றொருவர், அந்த திருடர் ஒரே நேரத்தில் தனது இறை நம்பிக்கையை உயிரோட்டத்துடன் வைத்து கொண்டதுடன், தனது தொழிலையும் செய்து இரட்டை பலன்களை பெற்றுள்ளார் என தெரிவித்துள்ளார்.

From around the web