தூக்கி வீசப்பட்ட குழந்தை சம்பவ இடத்திலேயே பலி! தீபாவளிக்கு சொந்த ஊருக்கு கிளம்பிய போது சோகம்!

 
சுதாகர்

சென்னை மாநகர வீதிகள் ஏறக்குறைய இப்போதே வெறிச்சோடி காணப்படுகின்றன. நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்றும் செங்கல்பட்டு, விழுப்புரம் என விடிய விடிய எறும்புகளின் ஊர்வலத்தைப் போல வாகனங்கள் பேரிசைச்சலோடு சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்து செல்லும். நாளை சென்னையின் வீதிகள் ஆள் அரவமற்று ஆழ்ந்த ஜென் நிலையில் இருக்கும்.

அப்படி சென்னையிலிருந்து சொந்த ஊரான கரூருக்கு குடும்பத்தோடு காரில் புறப்பட்டு சென்ற சுதாகருக்கும், அன்றைய நாள் பெரும் சோகத்தை மறைத்து வைத்திருப்பது தெரிந்திருக்கவில்லை. பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அவரது இரண்டரை வயது மகள் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

a

கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர், சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலைச் செய்து வருகிறார். தனது மனைவி கீர்த்தனாவையும், மகள் சுஷ்மிதாவையும் அழைத்துக் கொண்டு, தீபாவளி விடுமுறையைக் கொண்டாடுவதற்காக  சொந்த ஊருக்கு காரில் சென்றார்.

காரை சுதாகர் ஓட்டிச் சென்ற நிலையில், சென்னையில் இருந்து இரவு புறப்பட்ட அவர்கள் கரூர் -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். கார், வனவாசி டோல் பிளாசா அருகே சென்று கொண்டிருந்த போது, சாலை மேடு பள்ளமாக பழுதடைந்து இருந்ததால் கார் திடீரென்று சுதாகரின் கட்டுப்பாட்டை இழந்து 15 அடி பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்து  பெரும் விபத்துக்குள்ளானது.

கரூர்

சீட் பெல்ட் அணிந்திருந்ததால், காரை ஓட்டிச் சென்ற சுதாகருக்கு எந்த விதமான காயமும் இல்லை. குழந்தையும் மனைவியும் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததால் மனைவிக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. குழந்தை  தூக்கி எறியப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தூக்கி எறியப்பட்டு உயிரிழந்து கிடந்த குழந்தையை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு தந்தை கதறி அழுதது அவ்வழியாக சென்ற பொது மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web