தொடரும் சோகம்!! என்னை மன்னிச்சிடும்மா!! போனில் பேசிவிட்டு 14 வயது பள்ளி மாணவி தற்கொலை!!

 
கௌசிகா

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள பூசாரிப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் யசோதா. இவரது கணவர் முருகன். லாரி ஓட்டுனரான இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த தம்பதிக்கு கவுசிகா (14) என்ற மகள் இருந்தார். இவர் பண்ணப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.கணவர் முருகன் இறந்துவிட்டதால், தாய் யசோதா கூலி வே¬லைக்கு சென்று தன் மகள் கவுசிகாவை வளர்த்து வந்தார். இந்நிலையில் யசோதாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

கௌசிகா

இதன் காரணமாக மாணவி கவுசிகா தனது பாட்டி வீட்டில் இருந்தபடி பள்ளிக்கு சென்று வந்தார்.இந்நிலையில் மாணவி கவுசிகா திடீரென்று தூக்கில் தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கவுசிகாவை வீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கவுசிகாவை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதை கேட்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதார்கள்.

இது குறித்த தகவல் தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தெரிய வரவே வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட அறையை சோதனை செய்த போது அவரின் செல்போன் கிடைத்தது. அதன் அருகில் செல்போனுக்கான பாஸ்வேர்டும் இருந்தது.

தற்கொலை

செல்போனில் மாணவி ஒரு வீடியோ தனது தாய்க்கு பதிவு செய்துவிட்டு இறந்துள்ளார். அதில், என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது அம்மா என்னால் நிறைய கஷ்டப்பட்டுவிட்டார். இனி யாருக்கும் கஷ்டம் கொடுக்கக் கூடாது என்று நினைத்து நானே எடுத்த முடிவுதான் இது. என்னை மன்னித்துவிடு அம்மா’’ என்று உருக்கமாக பேசிவிட்டு கவுசிகா தூக்கில் தொங்கியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web