தொடரும் சோகம்!! நீட் தேர்வு முடிவு பயத்தில் மாணவி தற்கொலை!!

 
நீட்

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே குலசேகரமங்கலம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் அமல்ராஜ் (54). கூலி தொழிலாளியான இவருக்கு  வெண்ணியார் (48) என்ற மனைவியும், ராஜலட்சுமி (21) என்ற மகளும், உதயஜோதி (19) என்ற மகனும் உள்ளனர். இவரது மகள் ராஜலட்சுமி ப்ளஸ்-2 படித்துவிட்டு, மருத்துவ படிப்பில் சேர்வதற்காக கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதினார். இதில் அவர் தோல்வி அடைந்ததால், சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து மூன்றாவது முறையாக மீண்டும் நீட் தேர்வு எழுதியுள்ளார்.

நீட் தற்கொலை

இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர்  7-ம் தேதி வெளியாக உள்ளன. இதையொட்டி நீட் தேர்வுக்கான கீ விடைகளும் இணையதளத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியானது. இதையடுத்து நீட் தேர்வுக்கான விடைகளை ராஜலட்சுமி இணையதளத்தில் சரி பார்த்தார்.

பின்னர் அவர், நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவேன் என்றும், தனது மருத்துவ கனவு சிதைந்து போனதாகவும் பெற்றோரிடம் கூறி வேதனை அடைந்ததாக தெரிகிறது.  இந்த நிலையில் ராஜலட்சுமியின் பெற்றோர் வழக்கம்போல் அப்பகுதியில் உள்ள வயலுக்கு சென்றனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த ராஜலட்சுமி திடீரென்று தாயாரின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தென்காசி மக்களுக்கு குட்நியூஸ்!! உடனே முந்துங்க!! இன்று மிகப்பெரிய வாய்ப்பு!!

வீட்டுக்கு திரும்பி வந்த பெற்றோர் தங்களுடைய மகள் ராஜலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கியதைப் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து சேர்ந்தமரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் இறந்த ராஜலட்சுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு தோல்வி பயத்தில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web