இளம்பெண் விபரீத முடிவு! திருமணமான 4 மாதத்தில் தற்கொலை!

 
தற்கொலை இளம்பெண் தீ விபத்து கற்பழிப்பு பாலியல் கொலை க்ரைம்

ஐடி துறையில் வேலைப் பார்க்கும் இளம்பெண், திருமணமான 4 மாதத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வாரணவாசி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜ்.  இவரது மகள் தீபிகாவுக்கும், வாலாஜாபாத் அந்தம்பாக்கத்தை சேர்ந்த ரவிகாந்துக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

தற்கொலை

திருமணம் முடித்த தம்பதி அந்தம்பாக்கத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 9ம் தேதி தீபிகா வாரணவாசியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் மிகவும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. தீபிகாவீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கழிவறையில் தூக்கு போட்டுக் கொண்டார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் தீபிகாவை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தீபிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூக்கிட்டு தற்கொலை

இது குறித்து தகவல் அறிந்த ஒரகடம் போலீசார், வழக்குப்பதிவு செய்து தீபிகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த விசாரணை நடத்தினர். அதில் தீபிகாவுக்கு சிறு வயது முதலே வலிப்பு நோய் மற்றும் தீராத வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்த அவர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

திருமணம் முடிந்து 4 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தந்தை வீட்டுக்கு வந்த இளம் பெண் கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web