பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது மோதிய லாரி!! 6 பேர் பலியான சோகம்!!

 
மத்திய பிரதேசம் விபத்தில் 6 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் பேருந்திற்காக காத்திருந்தவர்கள் மீது லாரி மோதிய கோர விபத்தில்   6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேசத்தின் ரத்லம் மாவட்டம் சத்ருண்டா என்கிற கிராமத்தில் சாலையோரமாக உள்ள பேருந்து நிறுத்தத்தில் மக்கள் பலர் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது சாலையில் அதிவேகத்தில் வந்த லாரி ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

பலி

அங்கிருந்தவர்கள் தப்பி செல்ல முயன்ற போது சுமார் 20 பேர் மீது லாரி மோதியது. இதில், பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்ட நிலையில் சிலர் லாரி சக்கரத்தில் சிக்கி பலியானர். இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

மத்திய பிரதேசம் விபத்து

 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 8 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது . இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய லாரி ஒட்டுநரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web