போர் களமாக மாறிய திருமண வரவேற்பு விழா!! வீடியோ வைரல்!!

 
திருமண விழாவில் சண்டை

திருமணம் என்றாலே உறவினர்கள் புடை சூழ ஆடலும் பாடலும் நிகழ்ச்சி என களைக்கட்டும். சில திருமண விழாக்களில் கோஷ்டி மோதல் நடப்பது வழக்கம் தான். அப்படி ஒரு சம்பவம் தான் கேரள மாநிலம் ஆலப்புழாவில் நிகழ்ந்துள்ளது.   

5வது திருமணம்

ஆலப்புழாவில் நிகழ்ந்த திருமண வரவேற்பு விழாவில் மணமகனும் மண மகளும் மேடையில் நின்றுக்கொண்டு திருமண சடங்குகளை செய்துக்கொண்டிருக்கின்றனர். அப்போது மேடையில் கீழே நின்றுக்கொண்டிருந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் திடீரென சண்டையிட்டுக் கொள்கின்றனர். சேர்களை கொண்டும் தாக்கிக் கொள்கின்றனர்.

திருமண விழாவில் மோதல்

இதனைக் கண்ட மணமகன் திருமண சடங்குகளை நிறுத்திவிட்டு சண்டையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடுகிறார். மணமகனும், மணமகளும் பார்வையாளர்களாக மாறி சண்டையை பார்த்தப்படி மணமேடையில் நிற்கின்றனர். தற்போது இந்த  கோஷ்டி மோதல் வீடியோ   இணையத்தில் வைரலானது.   

From around the web