பல்கலைக்கழகத்தில் பேராசிரியரை செருப்பால் அடித்த மனைவி!! பகீர் பிண்ணனி!!
ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூர் பகுதியில் பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் 19-க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் நடத்தப்படுகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையில் உதவிப் பேராசிரியராகப் அனில் குமார் திரியா என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், அனில் குமாரை பல்கலைக்கழக வளாகத்துக்குள் வைத்து அவருடைய மனைவி செருப்பால் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சனிக்கிழமை காலை 11.30 மணி அளவில் உதவிப் பேராசிரியர் அவருடைய அறையில் இருந்தபோது, அவருடைய மனைவி திடீரென அறைக்குள் நுழைந்திருக்கிறார். அதன்பின் தன்னுடைய செருப்பை எடுத்து அவரைத் தாக்கி உள்ளார். அவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்.
இச்சம்பவத்தை அறையின் ஜன்னல் வழியாக யாரோ ஒருவர் வீடியோவாகப் பதிவுசெய்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார். உதவிப் பேராசிரியரின் கூச்சல் சத்தம் கேட்டு, பல்கலைக்கழக ஊழியர்கள் அங்கு வந்து கதவைத் திறக்குமாறு அந்தப் பெண்ணிடம் கூறி இருக்கின்றனர். அவரது மனைவி எதையும் பொருட்படுத்தாததால், அடித்துக்கொண்டே இருந்தார்.
அனில் குமாரை காப்பாற்ற பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் அனுப்பப்பட்டனர். பேராசிரியர்கள் வெகு நேரம் கேட்ட பின்பு கதவை திறந்து வெளியே வந்துள்ளார். அதன் பிறகு கதவைத் திறந்து உதவிப் பேராசிரியர் மீட்கப்பட்டார். மேலும், பல்கலைக்கழக ஊழியர்கள் அந்தப் பெண்ணை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பிவைத்தனர். ஆனால், அவர் எதற்காகத் தன்னுடைய கணவரை அப்படித் தாக்கினார் என்பது தெரியவில்லை.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், அந்த பெண்ணின் நடத்தை குறித்து பலர் கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த பெண் தனது கணவரிடம் ஏன் இவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டார் என்பது இன்னும் தெரியவில்லை, இருப்பினும், பல்கலைக்கழக வட்டாரங்களின்படி, பிரச்சினை அவர்களுக்கு இடையே தீர்க்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
வைரல் வீடியோ!! வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வைரல் வீடியோ!! இனி கார் சாவிய தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!