கணவரை கம்பத்தில் கட்டி வைத்து செருப்பால் அடித்த மனைவி!

 
ஸ்ரீகாந்த் செருப்பு

கல்யாணம் பண்ணிக்கிட்டு இன்னொருத்தியை தனியே வெச்சிருக்கிறது எல்லாம் அந்த காலம். இப்போதெல்லாம் பெண்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள். தன்னைத் திருமணம் செய்து விட்டு, குழந்தையும் பிறந்த பின்னர், தனக்குத் தெரியாமல்  இரண்டாவதாக வேறொரு பெண்ணைத் திருமணம் செய்த கணவரை, இழுத்து வெச்சு, நடுரோட்டில் எல்லோரும் பார்க்கும் படியாக மின்கம்பத்தில் கட்டி வைத்து செருப்பால் அடித்த மனைவி, அதன் பின்னரும் ஆத்திரம் அடங்காமல், கணவருக்கு செருப்பு மாலையும் அணிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீகாந்த் செருப்பு

தெலங்கானா மாநிலம், பெத்தப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மாந்தனியை அடுத்த ஸ்வர்ணபள்ளி  கிராமத்தை சேர்ந்தவர் அகிலா. அகிலாவுக்கும், ஸ்ரீகாந்த் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் பார்த்து, பேசி நிச்சயம் செய்து திருமணம் செய்து வைத்தார்கள். திருமணத்தின் போது அகிலாவின் பெற்றோர்கள் ஸ்ரீகாந்த்துக்கு வரதட்சணையாக ரூ.20 லட்சம் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் இருவர் வாழ்க்கையும் நல்லபடியாகவே சென்றுள்ளது. இருவருக்கும் ஒரு மகனும் பிறந்த நிலையில்  ஸ்ரீகாந்த் மனைவியை விட்டு பிரிந்துச் சென்று விட்டார்.

5வது திருமணம்

சரி.. ஸ்ரீகாந்த் இப்போது வருவார், பின்னர் வருவார் என்று அகிலா நினைத்திருந்த நிலையில், ஸ்ரீகாந்த் வாரங்கலில் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு தனியாக குடும்பம் நடத்தி வருவது அகிலாவுக்கு  தெரிய வந்தது. குழந்தையையும் கொடுத்து விட்டு சென்ற கணவர் வருவார் என்று காத்திருந்த அகிலாவுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், அகிலா தனது குடும்பத்தினர் உதவியுடன் ஸ்ரீகாந்த்தை ஹன்மகொண்டாவில் இருந்து ஸ்வர்ண பள்ளிக்கு நேற்று அழைத்து வந்தார். அதன் பின்னர், ஸ்ரீகாந்த்தை நடுரோட்டில் மின் கம்பத்தில் கட்டி வைத்து, ஆத்திரம் தீர செருப்பால் அடித்து செருப்பு மாலை அணிவித்தார். தகவலறிந்து வந்த போலீசார் ஸ்ரீகாந்த்தை மீட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்றெல்லாம் அகிலா நினைத்திருக்கவில்லை. இந்த தெளிவோடு பெண்கள் இருந்தால், இன்னொரு பெண் தேடி அலையும் சபல மனம் கொண்ட ஆண்கள் திருந்துவார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web