மர்ம உறுப்பில் கொதிக்கும் வெந்நீரை கொட்டிய மனைவி!! பகீர் வாக்குமூலம்!!

 
வெந்நீர்

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் தங்கராஜ் (32). இவர் மனைவி பிரியா (30). இவரகளுக்கு, 2 வயதில் ஒரு மகனும், 1 வயதில் ஒரு மகளும் உள்ளனர். ஸ்ரீபெரும்புதுாரிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கும், உடன் பணியாற்றும் பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 

தங்கராஜ் பிரியா

இதையறிந்த பிரியா தனது கணவரை கண்டித்தும், கள்ளக்காதலை கைவிடமாறு கூறியுள்ளார். இதனை தங்கராஜ் மறுத்ததால் தம்பதிக்குள் தினமும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் தங்கராஜ், கள்ளக்காதலியை சந்தித்து விட்டு இரவு, 10 மணிக்கு வீட்டுக்கு வந்தார். 

இதனால் வேதனையடைந்த பிரியா, நள்ளிரவு, 1 மணியளவில் குக்கரில் தண்ணீரை கொதிக்க வைத்து துாங்கிக் கொண்டிருந்த கணவர் தங்கராஜின் மர்ம உறுப்பின் மீது ஊற்றினார். வலி தாங்க முடியாமல் அலறிய தங்கராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு, வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

வெந்நீர்

இந்த சம்பவம் தொடர்பாக காவேரிப்பாக்கம் போலீசார், பிரியாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது போலீசாரிடம் பிரியா கூறியதாவது, இரு குழந்தைகள் இருக்கும்போது வேறு ஒரு பெண்ணுடன் கணவர் கள்ளக்காதல் வைத்துள்ளார். சம்பாதிக்கும் பணத்தை கள்ளக்காதலிக்கு கொடுத்து விடுவார். வீட்டு செலவுக்கு பணம் கொடுக்க மாட்டார். கேட்டால் என்னை அடித்து உதைப்பார். கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவருக்கு நுாதன தண்டனை கொடுக்க முடிவு செய்து, கொதிக்கும் வெந்நீரை ஊற்றினேன். இனி அவரால் கள்ளக்காதலியுடன் தனிமையில் இருக்க முடியாது. கள்ளக்காதல் வைத்துள்ள கணவர்களுக்கு இது ஒரு பாடம் எனக் கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web