கள்ளக்காதலனுடன் தோப்பில் இருந்த பெண்! மர்ம நபர்கள் செய்த கொடூரம்! நிர்வாண வீடியோவால் தொடர் தொந்தரவு!

 
பாலியல் துன்புறுத்தல்

கணவனை விட்டுப் பிரிந்து, தனியே வசித்து வந்த பெண், கள்ளக்காதலனுடன் தைல மரத் தோப்பில் இருந்த போது, மர்ம நபர்கள் கள்ளக்காதலனைத் தாக்கி, அந்த பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பெண்ணை நிர்வாணமாக செல்போனில் வீடியோவும் எடுத்து வைத்து கொண்டு, தேவைப்படும் போதெல்லாம் பாலியல் தொந்தரவும் கொடுத்து, பணமும் கேட்டு மிரட்டி வந்த சம்பவம் மரக்காணம் அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே முதலியார் சாவடியில் இயங்கி வரும் தனியார் விடுதி ஒன்றில் 40 வயது பெண் பணியாற்றி வருகிறார். இவருக்கு 3 மகள்கள். கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து பிரிந்து 3 மகள்களுடன் தனியே வசித்து வருகிறார்.

பாலியல் வன்கொடுமை

இந்நிலையில் அந்த பெண்ணுக்கு புதுச்சேரி காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். அதன்படி கள்ளக்காதலர்கள் இருவரும் மரக்காணம் அருகே உள்ள தைல மரத் தோப்பில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த எழில் பரதன் என்பவர் தனது நண்பருடன் அங்கு வந்தார். அப்போது இருவரும் சேர்ந்து கள்ளக்காதலனை அடித்து விரட்டி விட்டனர். இதனால் அந்த பெண் தனியாக மாட்டிக் கொண்டார்.

இதை பயன்படுத்திக் கொண்ட 2 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அதனை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். மேலும் இது குறித்து வெளியே சொன்னால் குடும்பத்துடன் சேர்த்து கொலைச் செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதே பாணியில் மிரட்டி அடிக்கடி 2 பேரும் அந்த பெண்ணை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தும், பணம் கேட்டும் மிரட்டியுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை

ஒரு கட்டத்தில் பணம் தர அந்த பெண் மறுத்ததால் ஆபாச வீடியோவை வாட்ஸ் அப்பில் அனுப்பி மிரட்டியுள்ளார். இதனால் பொறுமையிழந்த அந்த பெண் இது குறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் எழில்பரதன் மற்றும் அவரது நண்பரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web