வாய், கை, கால்கள் கட்டப்பட்டு பெண் கொலை!! பட்டப்பகலில் பயங்கரம்!!

 
சரோஜினி

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காந்தி நகரில் சரோஜினி என்ற 82 வயது மூதாட்டி வசித்து வந்தார். இவருடைய 2 மகன்களுக்கும் திருமணமான நிலையில், பெரிய நாயக்கன் பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். இதனால் காந்திநகரில் சரோஜினி மட்டும் தனியாக வசித்து வந்தார். அடிக்கடி மகன்கள் சரோஜினி வந்து பார்த்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

இந்நிலையில் வீட்டிற்கு பால் பாக்கெட் போட வரும் நபர் அதிகாலையில் போட்டுவிட்டு சென்றுள்ளார். ஆனால் காலை 11 மணியாகியும் பாலை எடுக்காமல் அப்படியே வாசலில் கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்தனர். 

சரோஜினி
உடனே அனைவரும் சரோஜினி வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர். கை, வாய், கால்கள் டேப்பால் சுற்றப்பட்டு சரோஜினி படுகொலை செய்யப்பட்ட சடலமாக கிடந்ததை கண்டு பயந்து அலறி கூச்சலிட்டனர். மேலும் அவர் அணிந்திருந்த நகைகள் காணாமல் போனதும் தெரிய வந்தது.

உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சரோஜினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொலை செய்தது யார்? நகைக்காக கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சரோஜினி வீட்டிற்கு யாரெல்லாம் வந்து சென்றார்கள்? சந்தேகப்படும்படியான ஆட்கள் நடமாட்டம் ஏதேனும் இருக்கிறதா? என்பது குறித்து அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.


மேலும் அங்கிருந்த அக்கம் பக்கத்தினரிடம் போலீஸ் நடத்திய விசாரணையில், ‘‘சரோஜினியின் வீட்டில் 3 பேர் வாடகைக்கு இருந்ததாகவும், அவர்களை காலை முதல் காணவில்லை என்றும் தெரிவித்தனர். இதன் மூலம் சரோஜினியை கொலை செய்துவிட்டு அவரின் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

கோவை

தனியாக வசித்து வந்த மூதாட்டியின் வாய், கை, கால்கள் டேப்பால் சுற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கோவை மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் குற்றவாளிகளை போலீசார் பிடிக்க வேண்டும் என்று அக்கம்பக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web