பைக்கில் சென்றவரை ஓங்கி உதைத்த பெண்!! தலைக்குப்புற விழுந்த விபரீதம்!!

 
பைக்கில் சென்ற பெண்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் ஒரு இளைஞர் தனது தோழியுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் சாலையில் தாறுமாறாக போகவே, பின்னால் பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், ‘ஏன் இப்படி பொறுப்பில்லாமல் வண்டி ஓட்டுகிறீர்கள்?’ எனக் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

பின்னர் அவர்கள் தங்கள் வழியில் செல்ல, இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணோ தங்களை பார்த்து செல்லுமாறு கூறிய இளைஞரின் பைக்கை எட்டி உதைக்க முற்பட்டார். ஆனால் அடுத்த நொடியே இவர் நிலைதடுமாறி ஓடிக்கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்து தலைகுப்புற விழுகிறார். 

இதனை பின்னால் காரில் வந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில்  பதிவிட அது தற்போது வைரலாகி வருகிறது. வண்டியை தாறுமாறாக ஓட்டியதை கேள்வி கேட்டதால் வெகுண்டெழுந்து அந்த பெண் செய்த தவறான செயல், அவருக்கே பாதகமாக மாறியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது ஒருபுறம் இருக்க, வரம்பு மீறி சென்ற அந்தப் பெண்ணை சமூகதளவாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web