இந்த 8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை இருக்கு.. வானிலை மையம் எச்சரிக்கை !!

 
rain

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஓய்ந்து பின்னர் கடும்பனிப்பொழிவு காணப்பட்டது. இதனையடுத்து தற்போது பனிப்பொழிவு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அதேநேரம் பகல் நேரங்களில் வெயிலும் வாட்டத்தொடங்கியது. எனினும் வெப்ப அலையால் பெரியளவில் பாதிப்பு வரவில்லை. இதனால் மழை குறைந்தது என்றே கருதப்பட்டது. எனினும் சில மாவட்டங்களில் கனமழை கொட்டியது. 

rain

இந்த நிலையில், சென்னையில் இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. கிண்டி, வடபழனி, குரோம்பேட்டை, கோயம்பேடு உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்த மழை தொடரும் என கூறப்படுகிறது. 

rain

இதனிடையே, தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சை, நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

From around the web