அதிர்ச்சி!! மூதாட்டி வீட்டில் கொள்ளையிட முயன்ற வட மாநிலத்தவர் அடித்து கொலை!

கும்மிடிப்பூண்டியில்  மூதாட்டி  வீட்டில்  கொள்ளயடிக்க   திட்டமிட்ட  வடமாநிலத்தவரை  பொது  மக்கள்  பிடித்து   தர்ம  அடி  கொடுத்ததில்  ஒருவர் பலி.  

 
கொள்ளையன் கொலை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கெட்டனமல்லி பகுதியில் வசித்து வருபவர் வடுவம்மாள். இவருக்கு வயது 80. நேற்று நள்ளிரவு 3 மணியளவில் வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் 2 பேர் வடுவம்மாள் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். சத்தம் கேட்டு எழுந்த மூதாட்டி கூச்சலிட்டதால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடினர். மூதாட்டியின் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தப்பியோட முயற்சித்த வடமாநில வாலிபர்களை பிடிக்க முயற்சித்த போது அதில் ஒரு வாலிபன் மட்டும் தப்பிச் சென்ற நிலையில் மற்றோருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் இணைந்து அந்த நபரை பலமாக தாக்கியுள்ளனர். பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற  கவரைப்பேட்டை போலீசார் இந்த வடமாநில வாலிபரை மீட்டு படுகாயங்களுக்கு சிகிச்சை அளிக்க பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அப்போது வாலிபரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியதால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து வடமாநில வாலிபரின் உடல் பிரேத பரிசோனைக்காக அங்கேயே வைக்கப்பட்டுள்ளது.   

பின்னர்  இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், உயிரிழந்த வடமாநில வாலிபர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பிச் சென்ற இன்னொரு வாலிபர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் பிடிபடும் பட்சத்தில் இறந்தவர் குறித்த விவரம் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வட மாநில இளைஞரை தாக்கிய நபர்களிடமும் போலீசார்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web