மிரட்டிய கொரோனா.. சீனாவில் களை கட்டியது புத்தாண்டு கொண்டாட்டம் !!

 
china

சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால், பூஜ்ஜிய-கொரோனா கொள்கை அமல்படுத்தப்பட்டது. அப்போது கடுமையான விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டதால் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அதேநேரம் கொரோனா பாதிப்பும் அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது சீனாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

china

பின்னர், உலக நாடுகளுக்கான விசாவில் தளர்வு அளிக்கப்பட்டு விமானப் போக்குவரத்து தொடங்கியது. பிறகு, சீன புத்தாண்டு வரவிருப்பதையும் மக்கள் கொண்டாட்டங்களுக்கு தயாராக, அரசும் பூஜ்ஜிய-கொரோனா கொள்கையை திரும்ப பெற்றது. இதையடுத்து, வெளிநாடுகளில் வசிக்கும் சீனர்கள் புத்தாண்டை கொண்டாட தாயகம் திரும்பியதால், புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கியது.

இந்நிலையில் சீன புத்தாண்டு கலை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கை உடன் நேற்று கோலாகலமாக, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சீனாவில் பாரம்பரிய லூனார் நாள்காட்டியின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஒரு விலங்கின் அடிப்படையில் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. சீன நாள்காட்டியில் உள்ள 12 விலங்கு ராசிகளில் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் அடிப்படையில்  புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

china

அதன்படி இந்தாண்டு முயல் புத்தாண்டை சீன மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம் முக்கியத்துவம் வாய்ந்த விழா என்பதற்கு இந்த கொண்டாட்டமே சாட்சியாகும். இது சந்திர-சூரிய சீன நாள்காட்டியின் தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. இதன் நேரடி மொழிபெயர்ப்பு ‘‘வசந்த விழா ஆகும். சீனா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் சீனர்கள் வசந்த விழாவை கோலாகலமாக கொண்டாடி வரவேற்றனர்.

From around the web