இன்றும் பள்ளிக்கு விடுமுறை!! மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!!

 
விடுமுறை

திருவள்ளூரில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு நேற்று மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் நேற்று இரவு மீண்டும் 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் இன்று பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து திருவள்ளூரில் பதற்றம் நிலவுகிறது.

திருவள்ளூர்

பொன்னேரி அருகே பஞ்செட்டியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. நேற்று அந்த பள்ளிக்கு திடீரென்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் பதறிப் போன பள்ளி நிர்வாகம் உடனடியாக மாணவர்களை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அதற்கு முன்னதாக திருவள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து சென்ற போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு ஏதேனும் உள்ளதா என்று பள்ளி முழுவதும் சோதனை செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மாணவர்களின் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்திருந்தனர்.

வெடிகுண்டு மிரட்டல்

இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் 2வது முறையாக குறிப்பிட்ட அந்த தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று பள்ளிக்கு 2வது நாளாக விடுமுறை அளித்து பள்ளி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் மீண்டும் மோப்பநாய் உதவியுடன் வெடுகுண்டு நிபுணர்கள் பள்ளியில் மீண்டும் சோதனை நடத்தினர். பள்ளிக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் அந்த பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர்கள் யார் என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web