இன்றே கடைசி!! 45,000 பணியிடங்கள்!! மத்திய அரசு வேலை!! உடனே விண்ணப்பியுங்க!!

 
ராணுவம்

இந்தியாவில் முப்படைகளில் ஆட்சேர்க்கும் வகையில் 45000பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. துணைராணுவப் படைகளுக்கும் தொடர்ச்சியாகத் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி சமீபத்தில் எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழிற்பாதுகாப்பு படை, அசாம் ரைபிள் படை, மத்திய ஆயுத காவல்படை இவைகளில்  காலிப்பணியிடங்களை  நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மொத்த பணியிடங்கள்: 45,284

ராணுவம்

வயது வரம்பு: 18 முதல் 23வயது வரை 
கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி 
சம்பளம்: NCBயில் சிப்பாய் பதவிக்கு லெவல்–1ன் படி, ரூ.18,000 முதல் 56,900 வரையும், மற்ற எல்லாப் பதவிகளுக்கும் லெவல்-3ன் படி, ரூ. 21,700 - 69,100 வரை 

job

Application

தேர்வு முறை: Computer Based Examination மற்றும் Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST), Medical Examination and Document Verification 

விண்ணப்பிக்கும் முறை: 

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலியாக உள்ள 45,284 பணியிடங்களில் விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் இருப்பவர்கள் https://ssc.nic.in/ என்ற இணையதள முகவரியில் 30.11.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web