நாளை..... !! போக்குவரத்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை!! அதிரடி உத்தரவு!!
ஊதிய உயர்வு, அகவிலைப்படி , பணிநிரந்தரம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழகங்கள் நாளை ஆகஸ்ட் 3ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இது குறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல், பணிக்கு வரவேண்டியது அவசியம் என தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்யக்கோரி, ஆகஸ்ட் 3ம் தேதி போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல், பணிக்கு வரும்படி தொழிலாளர்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் ஆகஸ்ட் 3 ம் தேதி விடுப்புகள் எடுக்க அனுமதியில்லை. ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்புகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு வராதவர்கள் அரசின் உத்தரவை மீறுபவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும், பணியாளர்கள் மீது சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?