பைக் மீது டிராக்டர் மோதி 2 பேர் பலி!! மகள் வீட்டிற்கு சென்ற போது பரிதாபம்!!

 
ஏழுமலை

கடலூர் மாவட்டம் பாலுார் அருகே உள்ள சித்தரசூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவர் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள தம்பிபேட்டை பாளையத்தில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டு மோட்டார் பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். 

விபத்து

அப்போது சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. கொத்தனர் தொழிலாளியான இவர் வேலை முடிந்து பாலூர் அருகே வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவரின் சைக்கிள் பஞ்சரானதால் அவ்வழியாக வந்த நாராயணசாமியிடம் லிப்ட் கேட்டுள்ளார்.

இதையடுத்து இருவரும் நடுவீரப்பட்டு சஞ்சீவிராயன் கோவில் அருகே வந்த போது அதே திசையில் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடு ஏற்றி சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது டிராக்டரில் பைக்கின் பின்னால் கட்டப்பட்டிருந்த சைக்கிள் இடித்து நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது பைக் மீது எதிர்பாராதவிதமாக டிராக்டர் ஏறியதில் நாராயணசாமி, ஏழுமலை ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

கடலூர்

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நடுவீரப்பட்டு போலீசார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதியதில் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web