சோகம்!! 90 அடி கிணற்றுக்குள் பாய்ந்த கார்!! துடிதுடித்து உயிரை விட்ட 3 இளைஞர்கள்!!

 
விபத்து

கோவை மாவட்டம் மருதமலை அருகே உள்ள வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ரோஷன், ஆதர்ஷ், ரவி இவர்கள் மூவரும் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று இரவு தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள மதுபான விடுதிக்கு விருந்துக்கு சென்றுள்ளனர். அதிகாலை நேரத்தில் விருந்து முடிவடைந்த நிலையில் ரோஷன் மற்றும் அவரது நண்பர்கள் காரில் வீடு திரும்பி கொண்டுள்ளனர்.

விபத்து

அப்போது தென்னமனூர் மாரியம்மன் கோயில் அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் இருந்த விவசாய கிணற்றில் கார் பாய்ந்தது.விவசாய கிணற்றுக்கு பாதுகாப்பிற்காக இரும்பு கேட் அமைக்கப்பட்டு இருந்துள்ளது. அந்த கேட்டையும் உடைத்துக்கொண்டு கார் சுமார் 90 அடியுள்ள கிணற்றில் விழுந்துள்ளது. அப்போது காரை ஓட்டி வந்த ரோஷன் மட்டும் அதிர்ஷவசமாக தப்பியுள்ளார். மற்ற 3 பேருடன் கிணற்றுக்குள் கார் விழுந்துள்ளது.

போலீஸ்

அதிபயங்கரமாக எழுந்த சத்தத்தினால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அத்துடன் உடனடியாக தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் ஒருவர் காயங்களுடன் மீட்க்ப்பட்டுள்ளார்.


தீயணைப்பு துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web