சோகம்!! நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!

செம்பரம்பாக்கம்   ஏரியில்   நண்பர்களுடன்  குளித்த  மாணவன்  நீரில்  மூழ்கி  பரிதாபமாக  உயிரிழந்தார்.

 
மாணவன் உயிரிழப்பு

சென்னை குன்றத்தூர் நால்ரோடு ஜங்ஷன் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரத மகன் ஜெகதீசன்இவர் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை 5 மணியளவில் தனது நண்பர்களான சூர்யா மற்றும் யுவராஜ் ஆகியோருடன் செம்பரம்பாக்கம் ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாததால் படிக்கட்டில் அமர்ந்து குளித்துள்ளார். அப்போது, அவரது நண்பர் சூர்யா, ஜெகதீசனை நீச்சல் அடிக்கும்படி ஏரியில் இறக்கியுள்ளார். அப்போது நீச்சல் தெரியாத ஜெகதீசன் ஏரியில் மூழ்கினார். அவரை மீட்க சூர்யா போராடியும் அவரால் மீட்க முடியவில்லை.

 உடனடியாக இச்சம்பவம் குறித்து சூரியாவும் அவரது நண்பர்களும்  குன்றத்தூர் போலீசருக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கிய ஜெகதீசனை தீவிரமாக தேடி வந்தனர்பின்னர் அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்ககொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் ஏரியில் நீச்சல் அடிப்பதை மற்ற நண்பர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அப்போது  நீச்சல் தெரியாமல் ஜெகதீசன்  ஏரியில் மூழ்கி இறந்து போன காட்சிகள் பதிவாகியிருந்தது. தற்போது இந்த காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web