சோகம்!! தறிப்பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பட்டறைத் தொழிலாளி உயிரிழப்பு!!

 
தீவிபத்து

ஈரோடு அடுத்த வீரப்பன் சத்திரம் கொத்துக்காரர் வீதியில் பெரியசாமி என்பவருக்கு சொந்தமான விசைத்தறி பட்டறை இயங்கி வருகிறது. இந்தப் பட்டறையில் 3 பேர் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் நேற்று எதிர்பாராத விதமாக தறிப்பட்டறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்தத் தீ விபத்தில், சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த விஜி என்ற தொழிலாளி உடல் கருகி உயிரிழந்தார். மற்ற இரண்டு பேர் சிறு காயங்களுடன் தப்பித்துள்ளனர்.தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து வீரப்பன் சத்திரம் காவல் துறையினர் இந்த விபத்து ஏற்பட்ட பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

 இந்நிலையில் காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில்   மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கான அனைத்து தடையங்களையும் சேகரித்து வரும் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தறிப்பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி  தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web