சோகம்!! விமானப்படை வீரர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை!!

 
நெரோவ்

கொரோனா கால ஊரடங்கிற்கு பிறகு சமீபகாலமாக தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. மன அழுத்தம் அதிகரிப்பதால் இந்த தற்கொலைகள் தொடர்வதாக மனவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

சென்னை ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை பகுதியில் இந்திய விமானப்படை பயிற்சி மையம் அமைந்துள்ளது. இந்த பயிற்சி மையத்தில் வீரர்களுக்கு டெக்னீசியன் மற்றும் சட்டம் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இங்கு ஆண்டுக்கு இரு முறை பயிற்சி முடித்த வீரர்களை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். 

துப்பாக்கி

இந்த பயிற்சி மையத்தில் குஜராத் மாநிலம், கொடிநூர் மாவட்டத்தைச் சேர்ந்த நீரோவ் சௌஹான் (22) என்ற வீரர், விமான உதவியாளராக கடந்த ஆண்டு பணிக்கு சேர்த்துள்ளார். இவருக்கு 13ம் தேதி முதல் 19ம் தேதி வரை பாதுகாப்பு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று (செப்.14) மதியம் நீரோவ் செளஹான் இந்திய விமானப்படை அலுவலகத்தின் முன் பகுதியில் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். 

அப்போது, மாலை சுமார் 4 மணி அளவில் இவர் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு கழுத்தில் சுட்டு கொண்டார். இதில் கழுத்தில் 3 தோட்டாக்கள் பாய்ந்ததில் நீரோவ் செளஹான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக வீரர்கள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து விமானப்படை அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். 

துப்பாக்கி

இது குறித்து விமான படை அதிகாரிகள் முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நீரோவ் சௌஹானின் தற்கொலைக்கு காரணம், குடும்பப் பிரச்னையா அல்லது பணியில் ஏற்பட்ட மன அழுத்தமா என விசாரணை நடத்தி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்னர் இதேபோன்று பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர், சக வீரரை துப்பாக்கியால் சுட்டு கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web