சோகம்!! 26 ஆண்டுகள் தனியாக வாழ்ந்து வந்த அமேசான் பழங்குடியின மனிதன் மரணம்!!
அமேசான் காட்டில் பல்வேறு பழக்க வழக்கங்களை கொண்ட பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் நிலம், விலங்குகள் என பல்வேறு காரணங்களாக ஒவ்வொருவராக உயிரிழந்து வந்தனர். இவர்கள் மற்ற மனிதர்களுடன் எந்தவித தொடர்பும் இல்லாமலேயே வாழ்ந்து வந்தனர். அந்த வகையில் பழங்குடியினத்தவரின் கடைசி மனிதர் எந்த விதமான மனித தொடர்புகள் இல்லாமல் கடந்த 26 ஆண்டுகளாக எந்தவித தொடர்பும் இல்லாமல் தனியாக வாழ்ந்து வந்தார்.
அங்கேயே நிலத்தில் குழிதோண்டி அதை தம் வாழ்விடமாக்கி வசித்து வந்தார். தற்போது அந்த குழிக்குள்ளேயே சடலமாக இருந்தது கண்டெடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பழங்குடிகள் 1970 முதல் நில ஆக்கிரமிப்புக்களுக்காக தொடர்ந்து வேட்டையாடி கொல்லப்பட்டார்கள். 25 ஆண்டுகளாக தொடர் வேட்டையாடலில் பழங்குடியின குடிகள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்பட்டனர்.
அதன்பிறகு 1995ல் மீதமிருந்த 7 பேரில் 6 பேர் கொல்லப்பட்டனர். அதில் எஞ்சிய ஒருவர் மட்டுமே குழிக்குள் உயிரோடு வாழ்ந்து வந்தார். அவரை வெளி உலகத்தினர் தொடர்பு கொள்ள முயன்ற போதும் அதை தவிர்க்கவே செய்தார். எந்த உதவிகளும் பெற முன்வரவில்லை எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!