சோகம்!! இன்னிசை கவிஞர் உயிரிழப்பு!! பிரபலங்கள் இரங்கல்!!

 
நக்கீரன்

வேலூர் சலவன்பேட்டை திருப்பூர் குமரன் 2-வது தெருவில் வசித்து வந்தவர் இன்னிசை கவிஞர்  இரா.நக்கீரன் என்ற கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு வயது 85.  இவர் நெடுஞ்சாலைத் துறையில் பணிபுரிந்து  ஓய்வு பெற்றவர். இவர் 16 வயது முதலே நாடகத்துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

rip
பேரறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., கவிஞர் சுரதா, நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஓய்வுபெற்ற நீதியரசர் மகராஜன், முன்னாள் ஆட்சியர் பாஸ்கரத் தொண்டைமான், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், இயக்குநர் ஜம்பு ஆகியோருடன் நெருங்கி பழகியவர்.

வேலூர்
பன்முகத் திறமைகளால் கவிஞர் கண்ணதாசனால் ‘இன்னிசைக் கவிஞர்’ என்ற சிறப்பு பெயர் பெற்றவர். இவரது மரணத்திற்கு பிரபலங்கள் பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இவரது உடல் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு தானம் கொடுக்கப்பட்டுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web