சோகம்!! மகளை அணைத்தபடி உயிரை விட்ட தாய்!! கதறிய குழந்தைகள்!!

 
மகேஸ்வரி

 

திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுகமணி மலையப்ப நகரில் வசித்து வருபவர் சக்கரவர்த்தி. கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மகேஸ்வரி (31) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிக்கு அட்சயா (15), கனிஷ்கா (10) என்ற 2 பெண் குழந்தைகளும், பிரேம் (12) என்ற மகனும் உள்ளனர்.

நீச்சல்

கருத்து வேறுபாடு காரணமாக சக்கரவர்த்தியும், மகேஸ்வரியும் தனித்தனியே இருந்துள்ளனர். குழந்தைகள் 3 பேரும் மகேஸ்வரியின் கண்காணிப்பில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மகேஸ்வரி தனது 3 குழந்தைகளுடன் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆற்றில் விளையாடிக் கொண்டிருந்த இளைய மகள் கனிஷ்கா தெரியாமல் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். இதனால் சிறுமி கனிஷ்கா ஆற்றில் மூழ்குவதை பார்த்த தாய் மகேஸ்வரி உடனடியாக அவரை காப்பாற்ற சென்றுள்ளார். ஆற்றில் ஆழம் அதிகமாக இருந்ததால் மகேஸ்வரியும், கனிஷ்காவம் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒருவர் பலி

இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் ஆற்றில் மூழ்கிய மகேஸ்வரியையும், கனிஷ்காவையும் தேடினர். தாய், மகள் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். உயிர் பிரியும் நிலையிலும் தாய் மகேஸ்வரி, கனிஷ்காவின் கைகளை அழுத்தமாக பிடிப்படியே உயிரைவிட்டார். இதை பார்த்த மகேஸ்வரியின் குழந்தைகளான அட்சயா மற்றும் பிரேம் கதறி அழுதனர். இதனால் உள்ளிட்ட அங்கிருந்தவர்களின் கண்கள் குளமாகிப் போனது. தாய், மகள் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகளை காப்பாற்ற சென்ற தாயும், ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web