சோகம்! மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 6 வயது சிறுவன் பலி!!
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் உக்கேரி தாலுகா ஹத்தராகி கிராமத்தில் வசித்து வந்த சிறுவன் வர்தன் எரண்ணா (6). இந்த நிலையில் தீபாவளிக்கு துணி வாங்க இருசக்கர வாகனத்தில் தனது தந்தையுடன் எரண்ணா நேற்று மதியம் பெலகாவிக்கு சென்று கொண்டு இருந்தான்.
பெலகாவி பழைய காந்திநகர் பகுதியில் சென்ற போது அங்கு சிலர் பறக்கவிட்டு கொண்டு இருந்த பட்டத்தின் மாஞ்சா கயிறு வர்தனின் கழுத்தை அறுத்தது. இதில் ரத்தவெள்ளத்தில் வர்தன் மயங்கி விழுந்தான்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வர்தனின் தந்தை, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வர்தனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவனுக்கு மருத்தவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் வர்தன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதையடுத்து வர்தனின் தந்தை மாலமாருதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மாலமாருதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடகாவில் மாஞ்சா நூலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுவன் உயிரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.