சோகம்! போதை வெறியில் வளர்ப்பு நாயை அடித்து கொன்ற வாலிபர்!

 
நாய்

சென்னையில், போதை வெறியில் வளர்ப்பு நாயை அடித்து கொன்ற வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பூர் ஹைதர் கார்டன் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர் கார்த்தி (32). கார் ஓட்டுனரான இவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தான் பணியாற்றும் இடத்திலிருந்து நாய் ஒன்றை எடுத்து வந்து தனது சொந்த வீட்டில் பாசமாக வளர்த்து வந்தார். இவரது தங்கைக்கும் அவரது கணவரான சிலம்பரசனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து செங்குன்றம் பகுதியில் கார்த்தியின் தங்கை வசித்து வருகிறார்.

ப்ளூ க்ராஸ் நாய்

இந்நிலையில் நேற்று மதியம் கார்த்தியின் வீட்டில் இருந்த நாய் திடீரென்று வலியில் அலறிதுடிக்கும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது சிலம்பரசன் போதை வெறியில் பிளாக்கி என்ற நாயை மரத்தில் கட்டி வைத்து உருட்டுக் கட்டையால் அடித்து துன்புறுத்திக் கொண்டிருந்தார். பின்னர் கார்த்தி வீட்டை விட்டு வெளியே வந்து பிளாக்கியை காப்பாற்ற முயற்சித்தார். அதற்கு சிலம்பரசன் அடித்ததில் நாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. 

ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுத்த நாய்..!!

இதை பார்த்த அக்கம்பக்கத்தினரும் சேர்ந்து சிலம்பரசனை அடித்து துரத்தினர்.  இது குறித்து தகவல் தெரிந்த ஓட்டேரி போலீசார் சிலம்பரசன் மீது விலங்குவதை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வெறி போதையில் வளர்ப்பு நாய் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web