சந்தேகத்தால் நிகழ்ந்த சோகம்!! காதல் மனைவியை அடித்தேக் கொன்ற கணவர்!!

 
கன்னித்தாய்

ஆசையாக உருகி உருகி காதலித்து திருமணம் செய்துக்கொண்ட மனைவியை சந்தேகம் என்னும் கொடிய நோயால் கணவரே கொலை செய்த கொடூர சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது.   தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அடுத்த திருமாஞ்சி நகரில் வசித்து வருபவர் இமானுவேல் அப்துல்லா. இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கன்னித்தாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கன்னித்தாய்

இவர்களுக்கு சையது அலி பாத்திமா, கதீஜா பிஸ்மி என 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், இமானுவேல் அப்துல்லா, தனது மனைவி கன்னித்தாய்க்கு வேறு நபருடன் தொடர்பு உள்ளதாக கூறி சந்தேகப்பட்டு உள்ளார். இது தொடர்பாக மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று மீண்டும் கணவன், மனைவி இடையே   தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இமானுவேல் அப்துல்லா, கன்னிதாயை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒருவர் பலி

இதனை அடுத்து, இமானுவேல் அப்துல்லா அங்கிருந்து தப்பிச்சென்றார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து வந்த முத்தையாபுரம் போலீசார், கொலையான கன்னிதாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய இமானுவேல் அப்துல்லாவை தேடி வருகின்றனர். சந்தேகம் எனும் கொடிய நோயால்   ஒரு குடும்பமே சீரழிந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  

From around the web