விளையாட்டில் விபரீதம்!! எல்.இ.டி. பல்பை விழுங்கிய ஒன்றரை வயது குழந்தை!!

 
எக்மோர் குழந்தை மருத்துவமனை

குழந்தைகள் உள்ள வீட்டில் சின்னஞ்சிறு பொருட்களை கவனமாக வைக்கவேண்டியது அவசியம். இல்லையெனில் எதையாவது எடுத்து வாயில் போட்டுவிடும். இதனால் குழந்தைகளை நம் கண் அசைவில் பார்த்துக் கொள்ளவேண்டும். அலட்சியபோக்கு சில நேரங்களில் விபரீதமாகி விடவும் வாய்ப்புக்கள் உண்டு. இதே போல் ஒரு சம்பவம் சென்னையில் நடந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

எல்.இ.டி.

சென்னை கிழக்கு தாம்பரம் எம்.இ.எஸ். சாலையில் வசித்து வருபவர்  விக்னேஷ்.இவர்  கொத்தனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு  திருமணமாகி ஒன்றரை வயதில் பூவேந்திரன் என்ற மகன் உள்ளார்.சிறுவன் பூவேந்திரன் நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். விளையாட்டு சாமான்களில் குழந்தைகளை ஈர்க்கும் வகையில்  சிறிய ரக எல்.இ.டி பல்பு பொருத்தப்பட்டுள்ளது.

பல விளையாட்டு பொருட்களில் இவை இருப்பதுண்டு. அந்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது அதில் எரிந்த பல்பை பிடுங்கி தவறுதலாக விழுங்கிவிட்டார். இதைத்தொடர்ந்து குழந்தைக்கு லேசான மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக  விரைந்து சென்று குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

குழந்தை உயிரிழப்பு
கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு தற்போது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தைக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் கூறும்போது, ‘‘குழந்தை தற்போது தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது. குழந்தைக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் எல்.இ.டி பல்பு தற்போது வயிற்று பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் குழந்தை சீரான உடல் நிலையில் உள்ளது’’ என தெரிவித்துள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web