ராணிப்பேட்டை அருகே சோகம்! டீக்கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து.. 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

 
டீக்கடை

சிலிண்டர் கசிவால் டீக்கடையில் ஏற்பட்ட விபத்து காரணமாக 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வானாபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (58). இவர் தனது வீட்டின் ஒரு பகுதியை டீக்கடையாக மாற்றியுள்ளார். இந்த கடையில் பால் காய்ச்சுவதற்காக தனியான சமையலறை மற்றும் அறையில் தனியாக சிலிண்டர் அடுப்பு ஒன்று மற்றும்  உள்ளது. 

இந்த நிலையில்  செல்வராஜ் வழக்கம்போல் தன் வியாபாரத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்ற நிலையில் இன்று அதிகாலை கடையை திறந்து வியாபாரத்திற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டுள்ளார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் டீ குடிப்பதற்காக அந்த கடைக்கு வந்துள்ளனர்.

காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் பரிதாபமாக 6பேர் உயிரிழப்பு!

அப்போது தீடீரென டீக்கடை உள்ளே உள்ள மற்றொரு அறை திறந்த செல்வராஜ் மின் விளக்கை ஒளிர செய்ய சுவிட்சை ஆன் செய்த போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்தது விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் படுகாயமடைந்த செல்வராஜ் மற்றும் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் உடனடியாக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் செல்வராஜ் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றம் செய்யப்பட்டனர் மீதமுள்ள 3 பேர் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ராணிப்பேட்டை

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில், டீக்கடையில் உள்ள தனி அறையில் இருந்த சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது என தெரியவந்துள்ளது.

From around the web