பயிற்சி மருத்துவர் விஷம் குடித்து தற்கொலை!! பகீர் பிண்ணனி!!

 
பிரவீன்

ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர் கோவை அரசு மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்த நிலையில் திடீரென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி  உள்ளது.ஆந்திர மாநிலம் நெல்லூரில் வசித்து வந்தவர் பிரவீன் அன்னதடா (வயது 33). இவர் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். தனியார் விடுதியில் தங்கியிருந்த பிரவீன், ஜாம்ஜெட்பூரில் உள்ள தனது கல்லூரியில் என்.ஓ.சி. வாங்கி சமர்ப்பிக்காமல் இருந்துள்ளார்.

மருமகனை விஷம் வைத்து கொலை செய்த மாமியார்!! பர பர வாக்குமூலம்!!

இதனால் கல்லூரி சார்பில் அழுத்தம் தந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த பிரவீன், தனது தந்தைக்கு போன் செய்து என்.ஓ.சி. சமர்ப்பிக்காவிட்டால் தேர்வு எழுத முடியாது என்று கூறி புலம்பியுள்ளார். அதற்கு அவரது தந்தை என்.ஓ.சி. வாங்கிவந்து சமர்ப்பித்துவிடலாம். கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறியிருக்கிறார்.இந்நிலையில் பிரவீன் கடந்த 6ம் தேதி கல்லூரிக்கு பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. எப்போதும் பெற்றோரிடம் பேசும் பிரவீன் அவர்களிடம் பேசாததால், அவர்களே பிரவீனுக்கு போன் செய்துள்ளனர்.

விஷம்

அப்போது அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் கோவைக்கு வந்து பிரவீன் தங்கியிருந்த விடுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது பிரவீன் வாய், மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக போலீசுக்கு புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரவீன் விடுதி அறையின் கட்டிலுக்கு அடியில் பூச்சிமருந்து கலந்த பீர் பாட்டில் இருந்தது கண்டுபிடித்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பயிற்சி மருத்துவர் என்.ஓ.சி. சமர்ப்பிக்காதது குறித்து பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web