ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்!! பயணிகள் கடும் அவதி!!

 
ரயில்

சென்னையில் இருந்து புறநகர் மின்சார ரயில்சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த மின்சார ரயில்கள் கொரோனாவிற்கு முந்தைய கால அட்டவணைப்படி இயக்கப்படுகின்றன.இன்று சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு வருகிறது.

ஊருக்கு கிளம்ப தயாராகிட்டீங்களா?! பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் அட்டவணை வெளியீடு!!

சென்னையில் இருந்து கோவை செல்லும் கோவை அதிவிரைவு ரயில் திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே சிக்னல் காரணமாக நிறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கோவை சதாப்தி அதிவிரைவு ரெயிலும், பிருந்தாவன் ரயிலும் (பெங்களூர்) அடுத்தடுத்து நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் அனைத்து மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்.

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இன்று இந்த ரயில்கள் ரத்து!!..

மேலும் அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே திருத்தணியில் இருந்து அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் மின்சார ரெயில்கள் மற்றும் வேலூரில் இருந்து அரக்கோணம் வழியாக சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில்கள் மற்றும் சென்னை சென்ட்ரல் மின்சார ரெயில்கள் என 5க்கும் மேற்பட்ட ரெயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ரெயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டதால் காலை நேரத்தில் வேலைக்கு செல்ல ரெயிலில் ஏறிய பயணிகளுக்கு தாமதம் ஏற்பட்டது.


இதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் ஒரு மணிநேரமாக சரி செய்யும் பணியில் ஈடுபட்டு கோளாறை சரி செய்தனர். அதன்  பின்னர் ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட ரெயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக அதன் வழித்தடத்தில் இயக்கப்பட்டன. இதனால் ரெயில் பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web