நேருக்கு நேர் மோதியதால் அப்பளம் போல் நொறுங்கிய லாரிகள்!! ஒருவர் பலி!!

 
லாரி விபத்து

தமிழகத்தின் பல பகுதிகளில் லாரிகள் கட்டுக்கடங்காத வேகத்தில் செல்வதால் பல நேரங்களில் அசம்பாவிதங்களும், விபத்துக்களும் ஏற்பட்டு விடுகின்றன. வேகத்தடைகள், போக்குவரத்து விதிகள் என சீரமைக்கப்பட்டாலும் லாரி ஓட்டுனர்களின் அலட்சிய மனோபாவத்தால் விபத்துக்களை தவிர்க்க முடிவதில்லை. 

விபத்து

முட்டைகள் ஏற்றப்பட்ட மினி லாரி கோவை மாவட்டம் சூலூர் அடுத்த எல்.அண்.டி. சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது பைபாஸ் சாலையில் மினிலாரி சென்று கொண்டிருந்த போது எதிர் திசையில் கண்டெய்னர் லாரி மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மினிலாரியும், கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்துக்குள்ளானது.

போலீஸ்
இதில் மினிலாரி அப்பளம் போலல நொறுங்கியது. அதன் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஓட்டுனரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முட்டை ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web