பகீர்!! சுதந்திரதினத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி? எல்லையில் சிக்கிய 2 பேரால் பரபரப்பு!!

பஞ்சாப்   எல்லை   வழியாக  போதைப்  பொருட்கள்  மற்றும்  பயங்கர  ஆயுதங்களை  கடத்த  முயன்ற  2 பேரை  போலீசார்  அதிரடியாக  கைது  செய்த  சம்பவம் பெரும்  அதிர்ச்சியை  ஏற்படுத்தி  உள்ளது

 
தீவிரவாதிகள் கைது

நாட்டின் 75-வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15-ல் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஆஸாதி கா அம்ருத் மஹோத்ஸவ் என்ற பெயரில் நாடு முழுவதிலும் முன்கூட்டியே பலவகையான கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 15-ல் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றிவைத்து உரையாற்ற உள்ளார். இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளை கூடுதல் கவனத்துடன் செய்யும்படி போலீஸாருக்கு மத்திய உளவுத்துறை அறிவுறுத்தி உள்ளது. இந்த  பாதுகாப்பு  ஏற்பாடுகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் எல்லையை ஒட்டிய பகுதியில் 2 பேர் சந்தேகப்படும் படி அங்கும் இங்குமாக சுற்றி திரிந்துள்ளனர். இவர்களை நோட்டமிட்ட தார்ன்தரன் 2 பேரையும்  தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் முன்னுக்கு பின் முரணாக இருவரும் பதில் அளிக்கவே பஞ்சாப் போலீசாருக்கு சந்தேகம் வலுத்ததுபின்னர் 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்தன. இந்திய எல்லை வழியே ரகசியமாக ஊடுருவி, பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் உள்ளிட்டவற்றை 2 பேரும் கடத்த முயன்றதை ஒப்புக் கொண்டனர்.

பிடிபட்ட 2பேரின் பெயர்  குர்வீந்தர் சிங் மற்றும் சந்தீப் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது.  மேலும் அவர்களிடம் இருந்து 35 கிராம் ஹெராயின் போதை பொருளும், 100 கிராம் எடையுள்ள பியம் வகை போதை பொருளும் கைப்பற்றப்பட்டன. மேலும் தோட்டாக்கள் நிரம்பிய 2 கைத்துப்பாக்கிகள், 2 தோட்டா உறைகள், உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் வருகிற 15ம் தேதி இந்திய சுதந்திரதினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாச வேலைகளில் ஈடுபட இவர்கள் திட்டமிட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

From around the web