இன்று ஐநா சபை தலைவர் இந்தியா வருகை!! உற்சாக வரவேற்பு!!
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவர் அப்துல்லா ஷாஜித். இவர் மாலத்தீவுகள் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில், அப்துல்லா ஷாஹித் 2 நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார்.
இந்த பயணத்தில் ஷாஜித் ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா உட்பட பலரைச் சந்தித்து பேச இருக்கிறார். அவர் இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள இருப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில் அறிவித்திருந்தார்.
அப்துல்லா ஷாஹித் தனது அலுவலகத்தில் இருந்து 3 உறுப்பினர்களைக் கொண்ட குழுவுடன் பயணம் செய்கிறார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76வது அமர்வின் தலைவராக அப்துல்லா ஷாஹித்தின் ஓராண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய இருப்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!