அதிர்ச்சி!! பண மோசடி கும்பலால் இளைஞர் தற்கொலை!! போலீசார் விசாரணை!!

 
இளைஞர் தற்கொலை

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரராகவன் இந்திரா தம்பதியினர். இவர்களின்  மகன் வினோத்குமார் . இவர் தற்போது மோசடி புகாரில் சிக்கியுள்ள .எஃப்.எஸ் நிதி நிறுவனத்தில்  ஏஜென்ட் ஆக இருந்து வருகிறார். இவர் தனது நண்பர்கள் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் என சுமார் 30க்கும் அதிகமான நபர்களிடமிருந்து 50 லட்சத்திற்கும் அதிகமாக முதலீடு செய்து இருக்கிறார்.தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை வளையத்தில் இருக்கும் ஐஎப்எஸ் நிதி நிறுவன இயக்குனர்கள் தலைமறைவாக இருப்பதால் கடந்த இரண்டு மாதங்களாக முதலீட்டாளர்களுக்கு  வட்டி பணம் கிடைக்கவில்லை. இதனால் அச்சமடைந்த முதலீட்டாளர்கள் பணம் வழங்காதது குறித்து ஏஜென்ட் வினோத்குமாரிடம் தொடர்ந்து கேட்டுள்ளனர்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான வினோத்குமார் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்த தகவல் அறிந்து வந்த திருவலம் காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து  விசாரணை மேற்கொண்டதில் முதலீட்டாளர்களுக்கு பதில் சொல்ல முடியாத விரக்தியில் வினோத்குமார் தூக்கிட்ட தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் வினோத்குமார் எழுதி வைத்த கடிதத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். அந்த கடிதத்தில் நிதி நிறுவன இயக்குனர்கள் லட்சுமி நாராயணன் ,ஜனார்த்தனன் மற்றும் மோகன் பாபு, சுந்தரம் ஆகியோர் இயக்கும் நிறுவனத்தில் பணம் செலுத்தியதாகவும், காவல்துறை அவர்களை கண்டுபிடித்து என் மூலம் பணம் செலுத்திய இவர்களுக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

என்னை நம்பியவர்களுக்கு என் முடிவிலாவது பணம் கிடைக்கட்டும் என்றும் பணத்திற்கு அனைத்து ஆவணங்களும் என்னுடைய இன்டர்நெட் பேங்கில் உள்ளது. முதலீடு செய்தவர்கள் நிறுவனத்தில் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். அனைவரும் மன்னித்துக் கொள்ளுங்கள் என அந்த கடிதத்தில் உள்ளது. பின்னர் வினோத்குமாரின் வீட்டில் இருந்த பாண்டு பத்திரங்கள், லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை காட்பாடி இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

From around the web